தடுப்பூசி முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு :

தடுப்பூசி முகாமை  ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு  :
Updated on
1 min read

தி.மலையில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

தி.மலை நகராட்சி சார்பில் 3 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில், வேட்டவலம் சாலையில் உள்ள லெபனான் பங்களாவில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். இதேபோல், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம், அரசு மருத்துவமனை, எலத்தூர் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பராமரிப்பு கூடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது, “தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிரிழப்புகள் குறைக்கப்படும். அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in