தினமும் ஒரு கோடி பேருக்கு - இலவசமாக தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல் :

தினமும் ஒரு கோடி பேருக்கு -  இலவசமாக தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல் :
Updated on
1 min read

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ப.கோபி தலைமையிலான அக்கட்சியினர், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று நேற்று அளித்த மனுவில், "கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை காரணமாக, நாடு முழுவதும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் 16 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக மத்திய அரசு கூறுகிறது. தொற்றில் இருந்து மக்களை காக்கநாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்குஇலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மின் மயானங்களில் பணிபுரியக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனை மூலம் நேரடியாக சென்று, தடுப்பூசியை செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக குடியரசு தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in