காய்கறி மூட்டைக்குள் மது கடத்தல் :

காய்கறி மூட்டைக்குள் மது கடத்தல் :
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகேதபோவனம் சோதனைச்சாவடி யில் நேற்று அதிகாலை அரகண்டநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையி லான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெங்காயம், உருளைக்கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறி மூட்டைகளில் காய்கறிகளுடன் மதுபாட்டில்களை வைத்து கடத்துவது தெரியவந்தது. 250 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட் டது. லாரி ஓட்டுநர் திருவண் ணாமலை மாவட்டம் பேரந்தாங் கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ துரை(28), கிளீனர் வெங்கடேசன் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப் பட்ட லாரி, மது பாட்டில்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் என மதிப் பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in