Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து - தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் :

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் கீழவாசலில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் பாதுஷா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் தீவிரம் காட்டுவதை கைவிட வேண்டும். இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காரைக்கால் மாவட்ட தமுமுக அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அப்துல் ரஹீம் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முகமது மாசிம், மாவட்டச் செயலாளர் முகமது ஆசிக், ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் முகமது நஜீம், மாவட்ட பொருளாளர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கரூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை (சிஏஏ) கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், அவரவர் வீட்டின் முன்பு நேற்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் காசிம் தெருவில் முன்னாள் மாவட்டத் தலைவர் உபைதூர் ரஹ்மான், காந்திகிராமம் பள்ளிவாசல் தெருவில் முன்னாள் மாவட்டப் பொருளாளர் அன்சாரி, வெங்கமேட்டில் ஷேக் ஹமானுல்லா, பள்ளபட்டி ஷா நகரில் நகரப் பொருளாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் அவரவர் வீடுகளுக்கு முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லப்பைக்குடிகாட்டில் மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன், விசுவக்குடியில் மாவட்டச் செயலாளர் குதரதுல்லா, ரஞ்சன்குடியில் நகரத் தலைவர் அப்துல் ரஹீம், வாலிகண்டபுரத்தில் மமக மாவட்ட துணைச் செயலாளர் சையது உசேன், அரும்பாவூரில் மமக மாவட்டப் பொருளாளர் முகமது இலியாஸ், தேனூரில் கிளை பொறுப்பாளர் அஹமது, வி.களத்தூரில் கிளைத் தலைவர் ஜமீல் பாஷா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதேபோல, திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் தமுமுக மாவட்டத் தலைவர் முகம்மது ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் இப்ராகிம், மாவட்டப் பொருளாளர் அஸ்ரப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு ஊராட்சியில் எம்எல்ஏ பி.அப்துல் சமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x