நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 2 பேர் கைது :

நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 2 பேர் கைது :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அருகே மட்டப்பாறை - செ.குன்னத்தூர் சாலையில் அனந் தபுரம் போலீஸார் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டுத்துப்பாக்கியுடன் காட்டுப்பகுதியில் சுற்றிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், செஞ்சி எம்ஜிஆர்நகரைச் சேர்ந்த சகோதரர்கள் சாரங்கபாணி (47), பிரபு (27) என தெரியவந்தது.

இருவரும் தங்கள் சகோதரர் ஓட்டாரிசிங் என்பவரின் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in