வீட்டில் பதுக்கி வைத்திருந்த 140 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் :

வீட்டில்  பதுக்கி வைத்திருந்த 140 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் :
Updated on
1 min read

செய்யாறு அருகே வீட்டின் பின் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 140 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுருட்டல் கிராமத்தில் வசிப்பவர் மணி. பிரபல சாராய வியாபாரியான இவர், தனது வீட்டின் பின் பகுதியில் சாராய கேன்களை பதுக்கி வைத்துள்ளது காவல்துறைக்கு தெரியவந்தது. அதன்பேரில் தூசி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களது வருகையை அறிந்த மணி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அவரது வீட்டின் பின் பகுதியில், சந்தேதிக்கும் இடத்தை காவல்துறையினர் தோண்டினர். அப்போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கேன்களில் 140 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணியை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in