Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் - செங்கையில் பணி தொடக்கம் :

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' பிரிவு தொடங்கப்பட்டு மனுக்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், தேர்தலின் போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் நிகழ்ச்சியில் 100 நாட்களில் குறைகளை தீர்ப்பதாகக் கூறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தற்போது அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற சிறப்பு துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்திலும் தனிப்பிரிவு தொடங்கி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை தொடங்கியுள்ளது. வரப்பெற்ற 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை துறை வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரிரு நாட்களில் அனைத்து துறைக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டு 100 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றில் தடுப்பணை, இலவச பட்டா, முதியோர் உதவித் தொகை, கலைக் கல்லூரி, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துதல் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x