Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் 722 பேருக்கு கரோனா :

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து மாவட்டத்தில் 33,842 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 20,857 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்று மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 6,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 14 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 509 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x