Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM

வேடசந்தூரில் ஊராட்சி தலைவர்களுடன் கரோனா பரவலை தடுக்க ஆலோசனை :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் தீவிரமாக பரவிவரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் 22 ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிராமப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, சுண்ணாம்பு பவுடர் தூவுவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவது, முகக் கவசம், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும் ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x