‘காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை’ :

‘காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை’ :
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் இன்று (நேற்று) 434பேர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு மட்டும் மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, கரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பழங்குடியினர் நலன் கல்லூரி மாணவிகள் விடுதியை 40 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சைமையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள9 தனியார் மருத்துவ மனை களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவிர்க்க முடியாத காரணங் களுக்காக வெளியில் வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in