Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

தொண்டு நிறுவனங்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட அழைப்பு :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் பணியில் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவுக்கான மின்னஞ்சல் முகவரி: tnngocoordination@gmail.com.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் https://ucc.uhcitp.in.ngoregistration என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்துகொண்டு கரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை (தொலைபேசி எண்: 044 29896049, மின்னஞ்சல்: dswo.tntlr@gmail.com) தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x