ஆறுகளில் தூர் வாரும் பணி தொடக்கம் :

ஆறுகளில் தூர் வாரும் பணி தொடக்கம் :
Updated on
1 min read

திருவாரூரை அடுத்த கொட்டாரக் குடி பகுதியில் உள்ள காட்டாறு, கள்ளிக்குடி பகுதிக்குட்பட்ட ஓடம்போக்கியாறு ஆகிய ஆறு களில் தமிழக முதல்வரின் தூர் வாரும் திட்டத்தின் கீழ் நேற்று தூர் வாரும் பணி தொடங்கப் பட்டது. ஆட்சியர் வே.சாந்தா மற்றும் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் இந்தப் பணிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் உடனிருந்தார்.

பின்னர், எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் கூறும்போது, “திருவாரூர் வட்டம் காட்டாறு ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், ஓடம்போக்கியாறு ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in