மா.கம்யூ. சார்பில் 2 ஆம்புலன்ஸ் வழங்கல் :

மா.கம்யூ. சார்பில் 2 ஆம்புலன்ஸ் வழங்கல் :
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரோனா தடுப்பு உதவி மையம் சார்பில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலகவளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் தலைமை வகித்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர்சங்க ரத்த தான கழகம் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு 270 லிட்டர் ரத்த மாதிரிகள்சேமிப்புக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பில் குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டதுடன், தொற்றாளர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனா தடுப்புஉதவி மையஅமைப்பாளர்கள் செ.முத்துக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in