Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

‘மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்’ :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா நீர்த்தேக்க தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை முழுமையாக நிரம்பியுள் ளது. இந்த அணையில் இருந்து கே.வி.குப்பம் மற்றும் குடியாத் தம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், கே.வி.குப்பம் தொகுதி மக்களின் தேவைக்காக மோர்தானா அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கோரிக்கை வைத்துள் ளார். இது தொடர்பாக நிர்வளத்துறை அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினை நிலவிவரும் நிலையில், போதிய மழை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொகுதி மக்களின் நிலை குறித்து தங்களுக்கு நன்கு தெரியும் என்ற நிலையில், மோர்தானா அணையில் இருந்து கே.வி.குப்பம் தொகுதி மக்களுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x