போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் பகுதியைச் சேந்தவர் தினேஷ்குமார் (19). சரக்கு வாகன ஓட்டுநர். இவர், ஆசை வார்த்தை கூறி, 14 வயது சிறுமியை திருமணம்செய்து கோவை மாநகர் பீளமேடுபகுதியில் வாடகைக்கு வீடுஎடுத்து தங்கியுள்ளார்.

காணாமல்போன சிறுமியை அவரது பெற்றோர் தேடுவதை அறிந்த தினேஷ்குமார், சிறுமியை அழைத்து வந்து அவரது ஊரில் விட்டுச் சென்றுள்ளார். திருமணம் குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி சிறுமியிடம் விசாரித்து, நடந்த சம்பவத்தை தெரிந்து கொண்டனர். மாவட்ட சமூக நல அலுவலரின் அறிவுறுத்தலின்பேரில், காங்கயம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ்வழக்கு பதிந்தனர். இளைஞரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் நேற்றுஅடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in