நாமக்கல் எஸ்பிக்கு கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதி :

நாமக்கல் எஸ்பிக்கு கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதி :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து அவர் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சி.சக்திகணேசன் உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார், என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in