Published : 26 May 2021 03:14 AM
Last Updated : 26 May 2021 03:14 AM

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட - நியாயவிலைக் கடைகளில் ஆக்சிஜன் கண்டறியும் கருவி : அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் வழங்கினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களுடைய ஆக்சிஜன் அளவினை அறிந்துகொள்ள ஏதுவாக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நேற்று ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கினர்.

நிவாரன உதவிகள்

தொடர்ந்து பவ்டா கல்வி குழுமம் சார்பாக 5 ஆக்சிஜன் காண்செண்ட்ரேட்டர் கருவிகள் மற்றும் 1,500 எண்ணிக்கையிலான சானிடைசர்களை அமைச்சர்கள் பெற்று சுகாதாரத்துறையினரிடம் மருத்துவ பணிகளுக்காக வழங்கினார்கள். மேலும், ராஜசுகர்ஸ்நிறுவனம் சார்பாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.

அப்போது ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், திட்ட இயக்குநர் காஞ்சனா சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x