வேங்கிக்காலில் கரோனா தடுப்பூசி :

வேங்கிக்காலில் கரோனா தடுப்பூசி  :
Updated on
1 min read

தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 226 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை மூலம் 18 வயது முதல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் கலைவாணி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர்த்தி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

முகாமில், 18 முதல் 44 வயது வரை உள்ள 164 பேருக்கும், 45 வயதுக்கு மேல் 62 பேருக்கும் என மொத்தம் 226 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in