Published : 24 May 2021 03:12 AM
Last Updated : 24 May 2021 03:12 AM

சாலை விபத்தில் : இளைஞர் உயிரிழப்பு :

தி.மலை மாவட்டம் வேட்டவலம் நகரம் தேரடி வீதியை சேர்ந்த வர் அரவிந்த்(23). இவர், வேட்ட வலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேட்டவலம் அருகே திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாய மடைந்து உயிருக்கு ஆபத்தானநிலையில் தி.மலை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x