கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - 1,589 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் -  1,589 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 522 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரையில் 28,806 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 519பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 25,293பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,312பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 201பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இம்மாவட்டத்தில் இதுவரையில் 17,832 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் மாவட்டத்தில் 42,825 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in