41 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க திருவாரூர் ஆட்சியர் உத்தரவு :

41 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க திருவாரூர் ஆட்சியர் உத்தரவு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் முன்பட்ட கோடை குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று, மாவட்டம் முழுவதும் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மன்னார்குடி வட்டத்தில் 29, நீடாமங்கலத்தில் 10, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டியில் தலா 1 என 41 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு, அதற்கான சுற்றறிக்கையை ஆட்சியர் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in