Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 1,653 பேருக்கு கரோனா :

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச்சேர்த்து இதுவரையில் 28,282 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 678 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களைச் சேர்த்து இதுவரையில் 24,774 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,310பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 198பேர் உயிரிழந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,565 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 864 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் இதுவரையில் இம்மாவட்டத்தில் 42,018 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x