குமரியில் கரோனாவுக்கு 17 பேர் மரணம் :

குமரியில் கரோனாவுக்கு 17 பேர் மரணம் :

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,723 பேராக உயர்ந்துள்ள நிலையில், 28,866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் நேற்று மரணமடைந்தனர்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 439 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 262 பேர் குணமடைந்தனர். இதுவரை 14 ஆயிரத்து 728 பேர் குணமடைந்துள்ளனர். 3,469 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,549 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 33,328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 7,011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in