Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM

குமரியில் 1,280 பேருக்கு கரோனா பாதிப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 1,280-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மரணமடைந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 604 பேர், கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவ மனை களில் 2,200 பேர், வீட்டு தனிமைப்படுத்தலில் 3,068 பேர் என 6 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி, தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 589 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ள நிலையில், நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனை களிலும், வீடுகளிலும் 3,296 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் 452 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந் துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,004 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 441 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 32,414 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். தற்போது, 7,040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x