தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வலியுறுத்தல் :

திருப்பூரில் நேற்று நடந்த அனைத்து பனியன் தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
திருப்பூரில் நேற்று நடந்த அனைத்து பனியன் தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

திருப்பூர் ஏஐடியூசி பனியன் சங்க அலுவலகத்தில், அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஏஐடியூசி பனியன் சங்கப் பொருளாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில், திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில், உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால் இன்றுவரை பனியன் தொழிற்சாலைகளில் பனியன் உற்பத்தி நிறுத்தப்படாமல், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் நோய் பாதித்தவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும், மருத்துவமும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகள், செயற்கை சுவாசக் கருவிகள் கொண்ட சிறப்பு முகாம்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் நவீன வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகளை உடனடியாக உருவாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தின் நகலை, தமிழக முதல்வர் மற்றும் ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in