மது விற்பனை அதிமுக பிரமுகர் கைது :

மது விற்பனை அதிமுக பிரமுகர் கைது :
Updated on
1 min read

அவிநாசி அருகே சாலையப் பாளையத்தில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களுடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அவர் அதிமுக அண்ணா தொழிற் சங்க அவிநாசி மேற்குஒன்றியச்செயலாளரும், வேட்டுவபாளையம் ஊராட்சி மன்றவார்டு உறுப்பினருமான ஏ.செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவிநாசி மதுவிலக்கு போலீஸார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை கைது செய்தனர். இவரிடம் இருந்து மதுபாட்டில்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in