கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - அரசு காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  -  அரசு காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்தொற்று சிகிச்சை மேற்கொள்ள 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 7-ம் தேதி முதல் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவ மனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்தொற்று சிகிச்சைமேற்கொள்ள 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓசூரில், சந்திரசேகரா மருத்துவ மனை, காவேரி மருத்துவமனை, விஜய்சாய் மருத்துவமனை, குணம் மருத்துவமனை, லஷ்மி மருத்துவமனை, சாந்தி மருத்துவமனை, ஜனனி மருத்துவ மனை, கிருஷ்ணகிரியில், செயின்ட் லுாயிஸ் மருத்துவமனை, நாதன் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, டிசிஆர் மருத்துவமனை, உமாராணி மருத்துவமனை, ஏ.ஆர்.கேமருத்துவமனை, விஜேஎஸ் மருத்துவமனை, ஸ்டார் மருத்துவமனை, சூர்யா மருத்துவமனை, சரஸ்வதி மருத்துவமனை, கிருஷ்ணா மருத்துவமனை, எஸ்.பி.எஸ் மருத்துவமனை, அருணாச்சல மருத்துவ மனை, ஜனரக்ஷா மருத்துவமனை, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை, தேன்கனிக்கோட்டை அசோகா மருத்துவமனை, ஜீவன் மருத்துவமனை, காவேரிப்பட்டணம் ஜிபி மருத்துவமனை ஆகியவை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகை யான கரோனா சிகிச்சைகளுக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். எனவே, பொது மக்கள் முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டுத் திட்ட அட்டையை பயன்படுத்தி தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக கரோனா மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in