விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில்  கரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 349 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 26,452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 22,936 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 12 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரையில் 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரையில் 16,225 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 765 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 38,830 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in