Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

வாணியம்பாடி அருகே - ஒற்றை யானை அட்டகாசம் :

வாணியம்பாடி அடுத்த காவலூர் பகுதியில் நுழைந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை சேதப்படுத்தின.

ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த மிட்டாளம், பத்தரப்பள்ளி, பாலூர், மாதனூர் உள்ளிட்ட பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது, அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தின.

இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் வனத்துறையினர் தமிழக – ஆந்திர எல்லையில் முகாமிட்டு ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிராமத்துக்குள் ஒற்றை யானை நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்தது. அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்த யானை அங்கு பயிரிடப்பட்ட நெற்பயிர் மற்றும் வாழை மரங்களை பிடிங்கி வீசி சேதப்படுத்தின.

நள்ளிரவில் விவசாய நிலத்தில் யானை நடமாட்டத்தை கண்ட விவசாயிகள் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏந்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், ஆலங்காயம் வனத்துறையினர் காவலூர் கிராமத்துக்கு சென்று யானை வந்து சென்ற இடங்களை ஆய்வு செய்தனர்.

பிறகு மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். யானையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x