ஊரடங்கு விதிமீறல் - ராமநாதபுரத்தில் 1,555 வழக்குகள் பதிவு :

ஊரடங்கு விதிமீறல் -  ராமநாதபுரத்தில் 1,555 வழக்குகள் பதிவு :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 1,555 பேர் மீது போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை மீறி செயல்பட்டவர்கள் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் சென்ற 599 பேர் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்த 64 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 1,555 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரவை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. 5 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவுவதை தடுப்பதற்காக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in