முகக்கவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு பாராட்டு :

முகக்கவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு பாராட்டு :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுவர்கள் சிலர் முகக்கவசம் அணிந்து சென்றனர்.

பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், முகக்கவசம் அணிந்து சென்ற சிறுவர்களை அழைத்த காவல் ஆய்வாளர் குமார், அந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்தும், பழங்களை அளித்தும் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in