திருவண்ணாமலை மாவட்டத்தில் - கரோனா தொற்றுக்கு 435 பேர் பாதிப்பு :

திருவண்ணாமலை மாவட்டத்தில்  -  கரோனா தொற்றுக்கு 435 பேர் பாதிப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று புதிதாக 435 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 30,702-ஆக உயர்ந்துள்ளது.

26,147 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,207 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 348-ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in