பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் பரவும் கரோனா தொற்று : திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் அதிருப்தி

பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் பரவும் கரோனா தொற்று  :  திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் அதிருப்தி
Updated on
1 min read

கரோனா தொற்று இருக்கும் என்றசந்தேகத்தின் அடிப்படையில்பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு, அதன் முடிவுகள் வெளிவர தொடர்ந்து தாமதமாகும் சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சிலர் கூறியதாவது: இரண்டு, மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாத நிலையில்தான், சளி (ஸ்வாப்) பரிசோதனைக்கு செல்கிறோம். ஆனால், அதன் முடிவுகள் வெளிவர தாமதமாகிறது. பரிசோதனை செய்பவர்களில் 10-ல் 8பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதேபோல, இன்னும் சிலர் வீடுகளில் தனி அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாத ஏழை, எளிய மக்களாகவும் உள்ளனர். ஓர் அறை, கழிவறை என பயன்படுத்தும் குடும்பங்களில், தொற்று எளிதாக மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த சூழலில்தான், தொற்று பரவுவதற்கான முக்கிய இடமாக கருதுகிறோம். உடனடியாக முடிவு கிடைத்துவிட்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், சமூகத்தில் உள்ள பிறருக்கும் பரவுவது முடிந்தவரை தடுக்கப்படும். அரசு இலவசமாக மேற்கொள்ளும் சளி பரிசோதனை (ஸ்வாப்) மூலமாகதான் பலரும்இன்றைக்கு கரோனா பரிசோதனையை உறுதி செய்கிறார்கள். சி.டி.ஸ்கேன் மூலமாக கரோனா தொற்றின் தீவிரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்றாலும், வேலைவாய்ப்பு நிரந்தரமற்ற நிலையில் அதற்காக தொகை செலவழிக்கக் கூடிய நிலையில் பல குடும்பங்கள் இல்லை.

3 நாட்களுக்கும் மேலாக

சென்னைக்கு அனுப்பிவைப்பு

்பணியில் 17 பேர்

தாமதம் தவிர்க்கப்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in