Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM

மனைவியுடன் தகராறு - கணவர் தற்கொலை :

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணி நகர், அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பூமிநாதன் (45). இவரது மனைவி விஜி (38). இவர் திருத்தணியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பூமிநாதன் தனது மனைவி நடத்தி வரும் அழகு நிலையத்தில் உதவியாக பணிபுரிந்து வந்தார்.

பூமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது, மனைவி திட்டியதால் மனம் உடைந்த பூமிநாதன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட மனைவி விஜியும், மகளும் பூமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, திருத்தணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x