கடலூர், கள்ளக்குறிச்சி,விழுப்புரத்தில் ஒரே நாளில் புதிதாக 1,551 பேருக்கு கரோனா :

கடலூர், கள்ளக்குறிச்சி,விழுப்புரத்தில் ஒரே நாளில் புதிதாக 1,551 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 719 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 389 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 333 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 154பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் 15,324 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in