Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட - 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என தமிழகத்தில் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க அரசு நட வடிக்கை எடுத்து வருவதாக சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் க.ராமச்சந்திரன் (வனத் துறை), அர.சக்கரபாணி (உணவு வழங்கல் துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனி வாசன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் மருத்துவத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், செய்தியாளர் களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:

சென்னையில் கரோனா கட் டளை மையம் (வார் ரூம்) உள்ளது. கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் விவரம், படுக் கைகள் விவரம், தடுப்பூசிகள் விவரம் போன்ற அனைத்து தகவல்களும், அந்த மையத்தில் தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். சென்னையில் உள்ளதை போல் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களிலும் கரோனா கட்டளை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, ரூ.46 கோடி முன்தொகை அளித்து 15 லட் சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள் ளன. இதில் 5 லட்சம் தடுப்பூசிகள் முதல்கட்டமாக தமிழகத்துக்கு வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் சென்னையில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். கோவையில் கொடிசியா சிகிச்சை மையத்துடன் சேர்த்து, மொத்தம் 5 இடங்களில் சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் கரோனா நோயாளிகளுக்கு மேற் கொள்ளப்படும்.

கோவையில் உள்ள இஎஸ்ஐ, அரசு மருத்துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகள் குறைந்த அளவு ஆக்சிஜன் பயன்படுத்தி சிறப்பாக சிகிச்சை அளித்து நோயாளிகளை குணப்படுத்தி வரு கின்றன. ஆம்புலன்ஸ் வாகனங் களில் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, கோவை அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா தொற்றாளர்களை உட னடியாக கீழே இறக்கி, அவர் களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று வகைகளை கண்டறிந்து, சிகிச் சைக்கு பிரித்து அனுப்பும் வகையில் 15 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரு கிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன் னர், தமிழக முதல்வர் 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவி லியர்கள், 2 ஆயிரம் தொழில் நுட்பப் பணியாளர்கள் என 10 ஆயி ரம் மருத்துவ பணியாளர்களை பணி நியமனம் செய்ய உத்தர விட்டுள்ளார். இவர்கள் நியமிக்கப் பட்ட பின்னர், கோவை இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கையில் பிரித்து அனுப்பப்படுவர்.

மருத்துவமனைகளில் காப் பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட் டுள்ளார். தற்போது அந்த திட் டத்தின்கீழ் சிகிச்சை முழுமையாக கிடைக்க தொடங்கியுள்ளது. தனி யார் மருத்துவமனைகளில் காப் பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்து கண் காணிப்போம். கோவை அரசு மருத் துவமனையில் கரோனாவால் இறந் தவர்களின் உடல்களை வைக்க கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, ரூ.46 கோடி முன்தொகை அளித்து 15 லட்சம் தடுப் பூசிகள் கேட்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x