அம்மா உணவகத்தில் 3 வேளையும் உணவு வழங்க கோரிக்கை :

அம்மா உணவகத்தில் 3 வேளையும் உணவு வழங்க கோரிக்கை :
Updated on
1 min read

பல்லடம் அரசு மருத்துவமனை யில் நோயாளிகளுக்கு வழங்கப் பட்டுவரும் படுக்கை, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து,சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் நேற்று ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தார். நோயாளிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஊரடங்கு நேரத்தில் ஏராளமானோர் உணவின்றி பாதிக்கும் சூழல் உள்ளதால், மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் உணவு வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in