பாலகொலா ஊராட்சியில் உதகை எம்எல்ஏ ஆய்வு :

பாலகொலா ஊராட்சியில் உதகை எம்எல்ஏ ஆய்வு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், நேற்று முன்தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 224-ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 340 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உதகை அருகே பாலகொலா ஊராட்சியில் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in