இந்து சமய அறநிலையத் துறை சார்பில் - நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் :

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் -  நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் :
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்த உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உணவு தொடர்ந்து வழங்கப்படும்” என்றார்.

இந்நிகழ்வில் திருவாரூர் கோட்டாட்சியர் பாலசந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹாஜீகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in