அடிதடி வழக்கில் 2 பேருக்கு சிறை : திருப்பூர் கோட்டாட்சியர் உத்தரவு

அடிதடி வழக்கில் 2 பேருக்கு சிறை :  திருப்பூர் கோட்டாட்சியர் உத்தரவு
Updated on
1 min read

நன்னடத்தை சான்றினை பெற்று, அதற்கான உறுதிமொழியை கடைபிடிக்காமல், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 2 பேருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் அடுத்த ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி தட்டாங்குட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (25). பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (26). இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஓராண்டுக்கு முன்பு, கோட்டாட்சியர் முன்னிலையில், எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என இருவரும் உறுதியளித்து, நன்னடத்தை சான்று பெற்றுள்ளனர்.ஆனால் அதையும் மீறி, இருவரும் தொடர்ச்சியாக அடிதடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இருவரையும் ஓராண்டு சிறையில் அடைக்க கோட்டாட்சியர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in