திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் : தொற்று பரவலால் பின்னலாடை நிறுவனத்துக்கு ‘சீல்’

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் :  தொற்று பரவலால் பின்னலாடை நிறுவனத்துக்கு ‘சீல்’
Updated on
1 min read

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதோடு, ஆக்சிஜன் படுக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின்போது திருப்பூர்- தாராபுரம்சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 191 கரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா படுக்கைகளை கூடுதலாகஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, மொத்தமாக 325 படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே ஆக்சிஜன் படுக்கைகள் 155 இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 45 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

மாநகராட்சி பொறியாளர் உயிரிழப்பு

டீக்கடைக்கு ‘சீல்’

28 பேருக்கு தொற்று

உதகை

இதுகுறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறும்போது,‘‘தற்போது ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிக அளவில் உள்ளதால் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 110-ல் இருந்து 150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 6,000 லிட்டர் ஆக்சிஜன் சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பயன் பாட்டுக்கு வரும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in