Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

போக்ஸோவில் தொழிலாளி கைது :

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் பரமசிவம் (51). இவர், திருப்பூரில் தங்கி, பனியன் தொழிலாளியாக, வேலை செய்து வந்தார். 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான அத்துமீறல் முயற்சியில் பரமசிவம் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக சிறுமி, அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ பிரிவின் கீழ் பரமசிவத்தை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x