Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் - ஒரே நாளில் 1,480 பேருக்கு கரோனா தொற்று :

ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,051 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முதல் முறையாக ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,695-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர். 2.73 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 201-ஐ கடந்து விட்டது. அரசு மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 2,078 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 214 பேர் குணமடைந்த நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x