Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

வீட்டுமனைப் பட்டா வாங்கித் தருவதாக மக்களிடம் பணம் வசூல் :

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் அண்ணா நகர், சிஎஸ்ஐ காலனி உள்ளிட்ட இடங்களில் பல குடும்பத்தினர், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இதைப் பயன்படுத்தி திருப்பூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து என்பவர், அப்பகுதிகளுக்குச் சென்று வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாக கூறி, சட்ட விரோதமாக பொதுமக்களிடம் ரூ.200 வசூல் செய்துள்ளார்.

இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ், சட்ட விரோதமாக பொதுமக்களிடம் பணம் வசூலித்த தங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவிநாசி போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x