Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

குடியாத்தத்தில் - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பு :

குடியாத்தம்

குடியாத்தம் நகரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூருக்கு அடுத்தபடியாக குடியாத்தம் நகரில் கரோனா இரண்டாம் அலை பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள கரோனா சிறப்பு சித்த வைத்திய சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதி பற்றாக்குறை இருப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியாத்தம் நகரில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘குடியாத்தம் நகரில் பெருமாள் கோயில் தெரு, கோவிந்தப்ப தெரு,கூடநகரம் சாலை, நேருஜி நகர், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வ.உ.சி தெரு, கம்பர் தெரு, விவேகானந்தர் தெரு, ராஜகோபால் நகர், பிள்ளையார் கோயில் தெரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பிச்சனூர் விவேக் முதல் தெரு ஆகிய பகுதிகள் முற்றிலும் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக் கப்பட்டு பொதுமக்கள் செல்வ தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x