Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

தி.மலை மாவட்டத்தில் - 732 பேருக்கு கரோனா தொற்று :

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு என்பது 500-ஐ கடந்து, ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 27,991-ஆக உயர்ந்துள் ளது. 24,618 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 329-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 644 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,763-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x