

கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும், அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே மாதமே வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. 10 லட்சத்து 25 ஆயிரத்து 103 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி பெற்றுவரும் 51 ஆயிரத்து 103 குடும்ப அட்டைதாரர்கள் உட்பட 9 லட்சத்து 82 ஆயிரத்து 833 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட கூட்டுறவுத் துறைக்கு ரூ.198 கோடியே 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள், வீடு வீடாக சென்று நேற்று முதல் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘எந்த தேதியில் வந்து நிவாரணத் தொகை பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கன் விநியோகிக்கச் செல்லும்போது ரேஷன் கடை ஊழியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும்’’ என்றனர்.
திருப்பூர்
உதகை