Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு :

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா வெளியிட்ட அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டகாவல் துறை சார்பில், கரோனாதொற்றின் 2-ம் அலையைத் தடுக்கும் வகையில், அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மருந்து, அவசர உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க இம்மையம் உதவும். உதவிகள் தேவைப்படுவோர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். பொது மக்கள் அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்றார். அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-27239200, 044-27236111.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x