கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரே நாளி்ல் புதிதாக 1,054 பேருக்கு கரோனா :

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில்  ஒரே நாளி்ல் புதிதாக 1,054 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 22,809 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 20,162 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,503 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 159 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் 14,110 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 34,199 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை 362 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in