மின் மாற்றியை கண்மாய்க்குள் அமைக்க எதிர்ப்பு :

மின் மாற்றியை கண்மாய்க்குள் அமைக்க எதிர்ப்பு :
Updated on
1 min read

சிவகங்கை அருகே மேலவா ணியங்குடியில் கண்மாய்க்குள் மின்மாற்றியை அமைப்பதைக் கைவிட்டு வேறிடத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத் தனர்.

மேலவாணியங்குடி கண்மாய் பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு வரு கிறது. கடந்த ஆண்டைப் போல் மழை பெய்தால் கிராமத்தினுள் தண்ணீர் புகும் நிலை ஏற்படும். இதனால் மின்மாற்றியை கண்மாய் கரையிலோ அல்லது அரசு புறம்போக்கு இடத்திலோ அமைக்க வேண்டும்.

கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் மின்மாற்றியை அமைத்தால் மின்கசிவு ஏற் பட்டால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in